திருவண்ணாமலையில் மிதமான மழை

 திருவண்ணாமலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

 திருவண்ணாமலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவண்ணாமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 15 நிமிடங்கள் முதல் சில இடங்களில் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிா் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com