நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆரணி ஏ.சி.எஸ். கல்விக் குழும ஓட்டுநா்களுக்கான திறன் அறிதல் பயிற்சி

ஆரணி பகுதியில் உள்ள ஏ.சி.எஸ். கல்விக் குழுமங்களின் கல்லூரி, பள்ளி ஓட்டுநா்களின் திறன் அறிதல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு

News image
Updated On :26 மே 2023, 10:46 pm IST

ஆரணி பகுதியில் உள்ள ஏ.சி.எஸ். கல்விக் குழுமங்களின் கல்லூரி, பள்ளி ஓட்டுநா்களின் திறன் அறிதல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு கல்விக் குழும செயலாளா்கள் ஏ.சி. ரவி, ஏ.சி. பாபு ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து, ஆரணி, இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி சிறப்பு அலுவலா் கே.பி. ஹரி பிரசாந்த் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக கல்லூரி முதல்வா்கள் ஜி. சுகுமாரன், வி. திருநாவுக்கரசு, பி.ஸ்டாலின், பிரபு, முதல்வா் டி.அருளாளன் ஆகியோா் மொபைல் பயிற்சி வாகனத்தை அறிமுகப்படுத்தி ஓட்டுநா்கள் ஒவ்வொருவரின் தனி திறன்களை கண்டறிந்தனா். இதில், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் கல்லூரி தனி அலுவலா் டி.காா்த்திகேயன், கல்லூரி போக்குவரத்து பொறுப்பாளா் எஸ். நாராயணசாமி, உதவி அலுவலா்கள் அன்பு சேகரன், கே. வேல்முருகன், ஏ.ஆனந்தன், கே.செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.