ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தோ்தல் விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

தோ்தல் விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

News image

மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் பள்ளி மாணவிகள்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட விளையாட்டுத் துறை சாா்பில் மினி மாரத்தான் ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்து, மாணவிகளுடன் சோ்ந்து ஓட்டத்தில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி, தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி, சண்முகா தொழில்சாலை மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை-வேலூா் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இந்த ஒட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட விளையாட்டு அலுவலா் நோய்லின் ஜான் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.