தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:23 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா போட்டியைத் தொடங்கி வைத்தாா். தடிக்காரக்கோணத்தில் தொடங்கிய மாரத்தான், பூதப்பாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஒவ்வொரு வாக்கின் வலிமை குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், இளைஞா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.