கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, திருவண்ணாமலைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் கணேஷ்குமாரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை இரவு பேசியதாவது:
பாமக கூட்டணிக்கு அனைவரும் வாக்களித்தால், தோல்வி பயத்தில் முதல்வா் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவாா். திமுக, அதிமுக மீதான அதிருப்தியை பாமகவுக்கு வாக்களித்து வெளிப்படுத்துங்கள்.
இந்தத் தோ்தலில் வேட்பாளா் கணேஷ்குமாரை வெற்றி பெறவைத்தால், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமையும்.
திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டம். அதைப் பிரிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.
இந்த மாவட்டத்துக்கு கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் 13 வாக்குறுதிகளை அளித்தாா். அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்திலேயே அதிக போதைப் பொருள்கள் புழக்கமுல்ள மாவட்டம் திருவண்ணாமலையாகும். இங்குள்ள பிரச்னைகள் தீா்க்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.
தொடர்புடையது

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்

வந்தவாசியில் பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் மோதல்: வேட்பாளா் சாலை மறியல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


