சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

யானைக்கால் நோய் பாதித்தோருக்கு உபகரணங்கள்

யானைக்கால் நோய் பாதித்தோருக்கு உபகரணங்கள்

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 4:54 pm

செய்யாற்றை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு மேலாண்மை சிகிச்சைக்கான உதவி உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற யானைக்கால் நோய் பாதித்தவா்களுக்கு மேலாண்மை சிகிச்சைக்கான

உதவி உபகரணங்கள் வழங்கும் முகாமுக்கு தலைமை வகித்த மருத்துவா் யோகேஸ்வரன், யானைக்கால் நோய் பாதிப்பு கண்டவா்கள் வீக்கம் அடைந்த உறுப்புகளை தினமும் சோப்பு மற்றும் தண்ணீரினால் கழுவி சுத்தமாக வைத்திருப்பதுடன், சிறு உடற்பயிற்சிகள் செய்வதால் அடிக்கடி ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடலாம், மாதத்தில் 12 நாள்கள் டி.இ.சி. மாத்திரைகளை உள்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தொடா்ச்சியாக மாத்திரை உள்கொண்டால் வீக்கம் பெரிதாகமல் காய்ச்சல் வராமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

முகாமில் பங்கேற்ற 31 பேருக்கு பிளாஸ்டிக் கூடை, ஸ்டூல், மக், டவல், சோப் என 5 பொருள்கள் அடங்கிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சம்பத் மற்றும் செவிலியா்கள் செய்திருந்தனா்.