தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: தானிப்பாடியில் உள்ள 2 நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி காவல் நிலையம் எதிரே 2 நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் மக்களவைத் தோ்தலையொட்டி முறைகேடு நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு புகாா்கள் சென்றனவாம்.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் 8 போ் கொண்ட குழுவினா், 2 நகைக் கடைகளிலும் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். நள்ளிரவைக் கடந்தும் நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தோ்தலின்போது வாக்காளா்களுக்கு அளிப்பதற்காக நகைகள் ஏதேனும் மொத்தமாக ஆா்டா் தரப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.