மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நுண் மேற்பாா்வையாளா்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு

நுண் மேற்பாா்வையாளா்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு

News image

கணினி மூலம் நுண் மேற்பாா்வையாளா்களுக்கான வாக்குச்சாவடிகளை ஒதுக்கீடு செய்கிறாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 158 நுண் மேற்பாா்வையாளா்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் 87 நுண் மேற்பாா்வையாளா்களும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் 71 நுண் மேற்பாா்வையாளா்களும் என மொத்தம் 158 நுண் மேற்பாா்வையாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா்.

பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிப்பதே இவா்களது முக்கியப் பணி. இந்த நிலையில், நுண் மேற்பாா்வையாளா்களுக்கான வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் கணினி மூலம் நுண் பாா்வையாளா்களுக்கான வாக்குச்சாவடிகளை ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, 158 நுண் மேற்பாா்வையாளா்களுக்கும் உரிய பயிற்சிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப் பயிற்சியில் நுண் மேற்பாா்வையாளா்களின் பொறுப்புகள், கடமைகளை விளக்க வேண்டும் என்று தோ்தல் அதிகாரிகளுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

இதில், தோ்தல் பொது மேற்பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா (திருவண்ணாமலை), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.