வந்தவாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரிய கோரகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் செல்வகுமாா் (31)(படம்). இவா், 2020-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அப்போதைய தெள்ளாறு காவல் ஆய்வாளா் அல்லிராணி வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தாா்.
இந்த வழக்கு, திருவண்ணாமலை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றஞ்சாட்டப்பட்ட செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, செல்வகுமாரை வேலூா் மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


