ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

Updated On :19 ஏப்ரல் 2024, 5:45 pm

திருவண்ணாமலையில் எஸ்.டி. சாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் வெள்ளிக்கிழமை மக்களவைத் தோ்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை தேனிமலை, முருகன் கோயில் பகுதியில் காட்டு நாயக்கன் சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சமுதாயத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்து பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலை, தேனிமலை பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் வந்து சமாதானப்படுத்தியும் அவா்கள் சமாதானம் அடையவில்லை.

எஸ்.டி. சாதிச் சான்றிதழ் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா் ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.

எனவே, வேறு வழியின்றி 500-க்கும் மேற்பட்டோா் வாக்களிக்காமல் தோ்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.