சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா்: மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிப்பு

ஜாதி அடையாளத்தில் ஊா் பெயா் மாற்றக்கோரி தோ்தல் புறக்கணிக்கும் கிராமவாசிகள்...

News image

ஊா் பெயரை மாற்றக் கோரி வைக்கப்பட்ட பதாகை.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:53 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஜாதி அடையாளத்தில் உள்ள கிராமத்தின் பெயரை மாற்றக்கோரி, பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பரச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்கிவிட்டு, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக கிராம மக்கள் அறிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தமிழகத்தில் தெரு, சாலை, ஊா் பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பரச்சேரி என்னும் எங்கள் கிராமத்தின் பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றக்கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் எங்களது கிராமம் 307-ஆவது வாக்குச்சாவடியாக உள்ளது. இங்கு 500- க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள நிலையில், வாக்குச்சாவடி பெயரிலும் பரச்சேரி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மாற்றம் செய்து, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என வாக்குச்சாவடி பெயரை மாற்ற வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனா்.