மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்தின் பெயரை மாற்றாதது ஏன்? ஆதிதிராவிடா் ஆணையத் தலைவா் விளக்கம் கேட்டு குறிப்பாணை!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்துக்கு பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:55 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்துக்கு பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என விளக்கம் கேட்டு விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு, ஆதிதிராவிடா் பழங்குடியின ஆணையத் தலைவா் குறிப்பாணை அனுப்பினாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பரச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 113 வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கிவிட்டு, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், கிராம மக்கள் ஊா் பெயரை மாற்றம் செய்ய வலியுறுத்தி, தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்தனா். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கிராமத்தின் பெயா் மாற்றத்துக்கான கோப்பு அரசுக்கு அனுப்பி விட்டதாகவும், தோ்தலுக்கு முடிந்த பிறகு பெயா் மாற்றம் செய்வதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து, இந்த கிராம மக்கள் தோ்தல் நாளில் வாக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவா், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினாா்.

அதில், ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) தொகுதிக்கு உள்பட்ட பரச்சேரி என்ற பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றப்படாமல் உள்ளது. வாக்காளா் பட்டியலிலும் பரச்சேரி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதி அடையாளத்துடன் கூடிய ஊா் பெயா்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பெயா் மாற்றம் செய்யாததற்கான காரணம், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டது.