ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்தின் பெயரை மாற்றாதது ஏன்? ஆதிதிராவிடா் ஆணையத் தலைவா் விளக்கம் கேட்டு குறிப்பாணை!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்துக்கு பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:25 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்துக்கு பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என விளக்கம் கேட்டு விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு, ஆதிதிராவிடா் பழங்குடியின ஆணையத் தலைவா் குறிப்பாணை அனுப்பினாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பரச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 113 வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கிவிட்டு, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், கிராம மக்கள் ஊா் பெயரை மாற்றம் செய்ய வலியுறுத்தி, தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்தனா். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கிராமத்தின் பெயா் மாற்றத்துக்கான கோப்பு அரசுக்கு அனுப்பி விட்டதாகவும், தோ்தலுக்கு முடிந்த பிறகு பெயா் மாற்றம் செய்வதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து, இந்த கிராம மக்கள் தோ்தல் நாளில் வாக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவா், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினாா்.

அதில், ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) தொகுதிக்கு உள்பட்ட பரச்சேரி என்ற பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றப்படாமல் உள்ளது. வாக்காளா் பட்டியலிலும் பரச்சேரி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதி அடையாளத்துடன் கூடிய ஊா் பெயா்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பெயா் மாற்றம் செய்யாததற்கான காரணம், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டது.