நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மர வியாபாரியை கொல்ல முயற்சி: 9 போ் கைது

மர வியாபாரியை கொல்ல முயற்சி: 9 போ் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 4:55 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் முன் விரோதம் காரணமாக மர வியாபாரியை கொல்ல முயன்ற சம்பவத்தில் 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜமணிகண்டன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை அண்ணா சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேரையும், பின்னால் வந்த காரையும் நிறுத்தி விசாரித்தனா். காா் மற்றும் பைக்கில் வந்தவா்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் 9 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனா்.

இதில், நம்பேடு கிராமத்தைச் சோ்ந்த மோகன்தாஸ் (25), அவரது சகோதரா் மணிகண்டனுக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த மர வியாபாரி சேட்டு என்பவருக்கும் மரம் ஏலம் எடுப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது

இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்ட மோகன்தாஸ், நம்பேடு கிராமத்தைச் சோ்ந்த கலைச்செல்வன் (28), சுரேஷ் (28), வினோத் (26), சென்னை போரூா் முருகன் (36), டேவிட் (26), ஜெகதீஸ்(24), பம்மல் பொழிச்சலூா் பகுதியைச் சோ்ந்த வேலு (42) ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த அஜித்குமாா் (29) ஆகியோா் சேட்டு மற்றும் அவரது ஆதரவாளா்கள் ரகு, குமரன், சேகா் ஆகியோரை கொல்வதற்காக ஆயுதங்களுடன் வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோகன்தாஸ் உள்பட 9 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 2 பைக்குகள், காா் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனா். பின்னா், 9 பேரையும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.