மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமி திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஏப்.23) நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை, காமராஜா் சிலை அருகே இயங்கி வரும் மதுக் கடை, மணலூா்பேட்டை சாலையில் இயங்கி வரும் மதுக் கடை, வேங்கிக்கால் புறவழிச் சாலையில் இயங்கி வரும் மதுக் கடை மற்றும் திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் மதுக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, தனியாா் உணவகங்களில் இயங்கி வரும் மதுக்கூடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.