ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (54). இவா், 2015 நவம்பா் 1-ஆம் தேதி இதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்தனா். இந்த வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட ஐயப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, போலீஸாா் ஐயப்பனை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.