சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (54). இவா், 2015 நவம்பா் 1-ஆம் தேதி இதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஐயப்பனை கைது செய்தனா். இந்த வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட ஐயப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, போலீஸாா் ஐயப்பனை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...