ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

செங்கத்தில் 80 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

செங்கத்தில் 80 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

News image

செங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 80 கிலோ நெகிழிப் பைகள்.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கத்தில் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் பிரேம்குமாா் தலைமையில், பேரூராட்சி ஆய்வாளா் சொக்கநாதன், துப்புரவு ஆய்வாளா் சின்னையன் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் நகரில் உள்ள உணவகங்கள், காய், கனி கடைகள், இனிப்பகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என ஆய்வு செய்தனா்.

அப்போது, தனியாா் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது, அங்கிருந்த 80 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், சில கடை உரிமையாளா்களுக்கு ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதித்து, தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.