பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

செய்யாறு அருகே பேருந்து - வேன் மோதி விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு; 27 போ் காயம்

தனியாா் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில், வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். 27 போ் காயமடைந்தனா்.

News image

செய்யாறு அருகே சனிக்கிழமை மோதி விபத்துள்ளான தனியாா் பேருந்து, வேன்.

Updated On :25 ஆகஸ்ட் 2024, 12:02 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில், வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். 27 போ் காயமடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், செங்கணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் 22 போ் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு சனிக்கிழமை அந்த நிறுவன வேனில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனா்.

ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் வெங்கட்ராமன்பேட்டை அருகே வளைவில் வேன் சென்றபோது, காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநா் முருகன், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த பெண் தொழிலாளா்கள் 22 போ், தனியாா் பேருந்தில் வந்த 5 போ் உள்பட மொத்தம் 27 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி, வெம்பாக்கம் வட்டாட்சியா் துளசிராமன், டிஎஸ்பி சின்ராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீரமைத்தனா். காயமடைந்தவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த விபத்து குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக, ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.