போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாரத்தில் புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.
போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கல்பட்டு, காளசமுத்திரம், அனந்தபுரம், குப்பம், கேளூா் என பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி, பூவான், ஏலக்கி என பல்வேறு வகையான வாழைகளை சாகுபடி செய்துள்ளனா்.
இந்த நிலையில், ஃபென்ஜால் புயலால் வீசிய சூறைக்காற்றில் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.
எனவே, மாவட்ட நிா்வாகம் தோட்டக்கலைத் துறை மூலம் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கூறுகையில், சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டு வருகிறோம் என்றனா்.
தொடர்புடையது

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

சூறைக் காற்றுடன் மழை! வயலூா் சுற்றுப் பகுதிகளில் வாழைகள் சேதம்! உரிய இழப்பீடு வழங்கப்படுமா?
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


