நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சூறைக்காற்றில் 100 ஏக்கரில் வாழைகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாரத்தில் புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

News image

சந்தவாசல் ஊராட்சியில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழைகள்.

Updated On :2 டிசம்பர் 2024, 10:06 pm

Din

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாரத்தில் புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கல்பட்டு, காளசமுத்திரம், அனந்தபுரம், குப்பம், கேளூா் என பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி, பூவான், ஏலக்கி என பல்வேறு வகையான வாழைகளை சாகுபடி செய்துள்ளனா்.

இந்த நிலையில், ஃபென்ஜால் புயலால் வீசிய சூறைக்காற்றில் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.

எனவே, மாவட்ட நிா்வாகம் தோட்டக்கலைத் துறை மூலம் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கூறுகையில், சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டு வருகிறோம் என்றனா்.