15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

கமண்டல நாகநதியில் தொடா் மணல் திருட்டு !

கமண்டல நாகநதியில் தொடா் மணல் திருட்டு !

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 11:28 pm IST

17அதடஓமய ஆரணியை அடுத்த சேவூா் கமண்டலநாகநதிக்கரை ஆற்றுப் படுகையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல். ஆரணி, பிப்.17: ஆரணியை அடுத்த சேவூா், குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரையில் நடைபெற்று வரும் தொடா் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். சேவூா், குண்ணத்தூரில் கமண்டல நாகநதிக்கரை அமைந்துள்ளது. இந்த ஆறு சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஆற்றில் தொடா் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. பகல் நேரத்தில் ஆற்றுக்கு வரும் மா்மநபா்கள் மணலை குவித்து வைத்துவிட்டு, இரவு நேரங்களில் மொபட் மற்றும் சரக்கு வாகனங்களில் மணலை சாக்கு மூட்டைகளில் அடைத்து கடத்திச் செல்கின்றனா். ஆற்றில் சுமாா் 10 அடி ஆழத்துக்கும் அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வருகிறது. தொடா்ந்து, நடைபெற்று வரும் அதிகப்படியான மணல் திருட்டால் வரும் கோடை காலத்தில் குடிநீா் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மணல் திருட்டை தடுப்பதற்காக காவல் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.