சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

ஆரணி அருகே காளை விடும் விழா

ஆரணி அருகே காளை விடும் விழா

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:46 am IST

ஆரணியை அடுத்த களம்பூரில் காளை விடும் விழா வெள்ளிக்கழமை நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் 38-ஆம் ஆண்டு காளை விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தா்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகள் களம்பூா் வீதியில் வெற்றி இலக்கை நோக்கி அவிழ்த்து விடப்பட்டன. இதில், மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா்.

காளைகளைப் பிடித்த வீரா்களுக்கும், சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசு ரூ.65 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.35 ஆயிரம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் களம்பூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.