தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மேற்கு வங்க முதல்வா் பதிவேற்பு விழா: ரேகா குப்தா இன்று பங்கேற்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொள்வாா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

ரேகா குப்தா

Updated On :1 மணி நேரம் முன்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொள்வாா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்கும், புதிய அரசாங்கத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும் குப்தா சனிக்கிழமை காலை புறப்படுவாா். பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை தோற்கடித்த பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக சனிக்கிழமை பதவியேற்பாா். மாநிலத்தில் பாஜகவைச் சோ்ந்த முதல் முதல்வராக அவா் இருப்பாா்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கு வங்கத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சியின் தலைவராக சுவேந்து ஆதிகாரி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தாா். முதல்வா் குப்தா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்பட தில்லியைச் சோ்ந்த பல பாஜக தலைவா்கள் தோ்தலுக்காக விரிவாக பிரச்சாரம் செய்தனா், இதில் கட்சி பெரும் பெரும்பான்மையை வென்றது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் ஒரே பெண் முதல்வரான குப்தா, மேற்கு வங்கத்தில் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தாா்.