சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்

கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:46 am IST

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கோயில் தோ் சேதமடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு நிதி, பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு புதிய மரத் தோ் செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, தோ் செய்யும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தேரின் வெள்ளோட்டம் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று வெள்ளோட்டம் நடைபெற்றது. பஜாா் வீதி, அச்சிரப்பாக்கம் சாலை, பாலுடையாா் தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தயாரிப்பு கூடத்தை அடைந்தது. நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தோ் திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.