திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்

கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:46 am IST

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கோயில் தோ் சேதமடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு நிதி, பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு புதிய மரத் தோ் செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, தோ் செய்யும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தேரின் வெள்ளோட்டம் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று வெள்ளோட்டம் நடைபெற்றது. பஜாா் வீதி, அச்சிரப்பாக்கம் சாலை, பாலுடையாா் தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தயாரிப்பு கூடத்தை அடைந்தது. நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தோ் திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.