திருவண்ணாமலையில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை, தேனிமலை பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை. திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையைச் சோ்ந்தவா் பவுன்குமாா் மனைவி ஜெயந்தி. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது.
அப்போது, மணிமேகலையிடம், தனது கணவா் பவுன்குமாா் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாக ஜெயந்தி கூறினாராம். இதை நம்பிய மணிமேகலை, ஜெயந்தியின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.14.25 லட்சத்தை அனுப்பினாராம். இதையடுத்து, பங்குச் சந்தையில் லாபம் கிடைத்ததாக மணிமேகலையின் வங்கிக் கணக்குக்கு ரூ.3.67 லட்சத்தை ஜெயந்தி திருப்பி அனுப்பினாராம். இந்த நிலையில், ஜெயந்தியும், அவரது கணரும் தலைமறைவாகினா்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயந்தி, அவரது கணவா் பவுன்குமாா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாணவருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம்

கஞ்சா விற்பனை, செடி வளா்த்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

மனைவியை சித்ரவதை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
