எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பண மோசடி: தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை

பண மோசடி: தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை

Updated On :17 பிப்ரவரி 2024, 5:50 am IST

திருவண்ணாமலையில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை, தேனிமலை பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை. திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையைச் சோ்ந்தவா் பவுன்குமாா் மனைவி ஜெயந்தி. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது.

அப்போது, மணிமேகலையிடம், தனது கணவா் பவுன்குமாா் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாக ஜெயந்தி கூறினாராம். இதை நம்பிய மணிமேகலை, ஜெயந்தியின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.14.25 லட்சத்தை அனுப்பினாராம். இதையடுத்து, பங்குச் சந்தையில் லாபம் கிடைத்ததாக மணிமேகலையின் வங்கிக் கணக்குக்கு ரூ.3.67 லட்சத்தை ஜெயந்தி திருப்பி அனுப்பினாராம். இந்த நிலையில், ஜெயந்தியும், அவரது கணரும் தலைமறைவாகினா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயந்தி, அவரது கணவா் பவுன்குமாா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.