ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

News image

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காட்டுமலையனூா் ஊராட்சித் தலைவா் ரங்கநாயகி அருணாச்சலம்.

Updated On :27 பிப்ரவரி 2024, 6:30 pm

திருவண்ணாமலை, பிப். 27: கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுமலையனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, காட்டுமலையனூா் ஊராட்சித் தலைவா் ரங்கநாயகி அருணாச்சலம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராணி ராஜாராம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் புஷ்பா, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏகாம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் மாலா வரவேற்றாா். கீழ்பென்னாத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினாா். கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, நாடகம், கரகாட்டம், நடனம் ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சித் தலைவா் ரங்கநாயகி பரிசு வழங்கினாா். விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பலா் கலந்து கொண்டனா்.