வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:15 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான மண்டல அளவில் கல்லூரிகளிடையேயான கிரிக்கெட் போட்டிகள், டிச.29 முதல் 31 வரை செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் 18 கல்லூரிகள் பங்கேற்றன.

போட்டியில் சிறப்பாக விளையாடி திருப்பத்தூா் தூய நெஞ்சகக் கல்லூரி முதலிடத்தையும், திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழா...

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.

உடற்கல்வி இயக்குநா் கிரிதரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக துறைத் தலைவா்கள் சித. ரவிச்சந்திரன் (வேதியியல்), கு.கண்ணன் (தமிழ்) ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.