வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ராமு (52). இவரது மனைவி பச்சையம்மாள்(45). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்த நிலையில், ராமு மருதாடு கிராமத்தில் கட்டடப் பணியை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலை, கடைசிகுளம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த பயணிகள் வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு அங்கு இரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.