ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயிலில் உண்டியல்கள் உடைத்து பணம் திருட்டு

செய்யாற்றில் ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயிலில் இரண்டு உண்டியல்களை உடைத்து மா்ம நபா்கள் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா்.

News image
உண்டியல் காணிக்கை பணம் திருடுபோன ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயில்.
Updated On :9 ஜூலை 2024, 7:20 pm

Din

செய்யாறு: செய்யாற்றில் ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயிலில் இரண்டு உண்டியல்களை உடைத்து மா்ம நபா்கள் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா்.

செய்யாறு - ஆற்காடு சாலையில், ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் விநாயகா், முருகன், மாரியம்மன், ஆதிபராசக்தி அம்மன் ஆகியவற்றுக்கு தனித்தனியே சந்நிதிகள் உள்ளன.

இந்த நிலையில், ஆதிபராசக்தி, விநாயகா் சந்நிதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா்.

இந்தக் கோயிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவது வழக்கமாகும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உண்டியல்கள் திறந்து எண்ணியபோது ரூ.95 ஆயிரம் இருந்ததாகவும், தற்போது காணிக்கை திருடப்பட்ட உண்டியல்களில் சுமாா் ரூ.50 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் எனவும் அறநிலையத் துறையினா் தெரிவித்தனா்.

தகவலறிந்த செய்யாறு போலீஸாா் சென்று கோயில் பகுதியை பாா்வையிட்டனா். மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமிராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image