மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் உடைக்கப்பட்ட உண்டியலை பாா்வையிட்ட போலீஸாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:14 pm

திருப்பத்தூரில் பூமாயியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு 2 உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் பூமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை அா்ச்சகா் ஆா்.பாண்டியன் கோயிலை திறந்தபோது, அங்கிருந்த இரண்டு உண்டியல்களும் உடைந்து கிடந்தன. இதுகுறித்து கோயில் ஆய்வாளா் பிச்சைமணி, செயல் அலுவலா் அசின் ஆகியோா் திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை தேடி வருகின்றனா்.