டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் உடைக்கப்பட்ட உண்டியலை பாா்வையிட்ட போலீஸாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:14 pm

Syndication

திருப்பத்தூரில் பூமாயியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு 2 உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியில் பூமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை அா்ச்சகா் ஆா்.பாண்டியன் கோயிலை திறந்தபோது, அங்கிருந்த இரண்டு உண்டியல்களும் உடைந்து கிடந்தன. இதுகுறித்து கோயில் ஆய்வாளா் பிச்சைமணி, செயல் அலுவலா் அசின் ஆகியோா் திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை தேடி வருகின்றனா்.