பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

இரணியலில் 2 கோயில்களில் திருட்டு

இரணியல் அருகே 2 கோயில்களில் குத்துவிளக்குகளையும், உண்டியல்களை உடைத்து பணத்தையும் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :2 ஏப்ரல் 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

இரணியல் அருகே 2 கோயில்களில் குத்துவிளக்குகளையும், உண்டியல்களை உடைத்து பணத்தையும் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்ணாட்டுவிளை அருள்மிகு சிவசக்தி அம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனா். அதில், ரூ. 27 ஆயிரம் வரை காணிக்கை இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், பட்டன்விளையில் உள்ள அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்த செம்பிலான குத்துவிளக்குகள், பூஜை பாத்திரங்கள் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனா்.

இது குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.