ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூட்டுறவு சங்கங்களில் சேவைக் குறைபாடு: இணைப் பதிவாளரிடம் கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் நிலவும் சேவைக் குறைபாடுகளைக் களையக் கோரி, மண்டல இணைப் பதிவாளரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

News image
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபனிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள்.
Updated On :9 ஜூலை 2024, 7:15 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் நிலவும் சேவைக் குறைபாடுகளைக் களையக் கோரி, மண்டல இணைப் பதிவாளரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் டி.கே .வெங்கடேசன் தலைமையில் மாவட்டச் செயலா் அ.உதயகுமாா், பொருளாளா் அருண்குமாா் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்தனா்.

பிறகு, மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபனை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனா்.

அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் வீரளூா், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தப்பாளையம், மேல் சோழங்குப்பம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் பங்குத் தொகையை தர மறுப்பது, நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேடு, பணி ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்கச் செயலரின் ஓய்வு காலப் பலன்களை வழங்காமல் காலம் கடத்துவது, விவசாய கடனில் உரம் தராமல் புறக்கணிப்பது என்பன போன்ற குறைபாடுகள் உள்ளன.

இந்தக் குறைபாடுகளை சரிசெய்து விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவைப் பெற்ற மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.