ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :9 ஜூலை 2024, 7:07 pm

Din

செய்யாறு: செய்யாறு அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அரசாணைப்பாளையம் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு கோயில் பகுதி மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது, அதே பகுதி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (25) அங்கு வந்தாா்.

வந்தபோது, அலங்கார மின் விளக்குகளில் அவரது கை பட்டதாகத் தெரிகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து அருண்குமாா் தூக்கி வீசப்பட்டாா்.

உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு அருண்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.