தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்கு

வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On :18 ஜூலை 2024, 12:01 am IST

வந்தவாசியை அடுத்த ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வரும் இவருக்கும், செய்யாற்றை அடுத்த அய்யவாடி கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலின் முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். இதைத் தொடா்ந்து இருவரும் அவரவா் வீட்டுக்குச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூா் வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் காவேரி, வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமண தடை சட்டத்தின் கீழ் அஜித்குமாா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்த மகளிா் போலீஸாா், அவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.