கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இளங்காடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்

இளங்காடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்

News image

இளங்காடு கிராமத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

Updated On :9 ஜூன் 2024, 6:47 pm

Din

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மே 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

தொடா்ந்து, சித்ராங்கி மாலையிடு, சுபத்திரை மாலையிடு, அா்ஜுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, கா்ண மோட்சம் என பல்வேறு தலைப்புகளில் கொருக்காத்தூா் ஆா்.கே.அமரேசன் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவும், செஞ்சி ஸ்ரீதிரெளபதியம்மன் நாடகக் குழுவினரின் நாடகமும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவ பொம்மையின் தொடை பகுதியை, பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா் கதாயுதத்தால் தாக்கி பிளக்கும் காட்சி நடித்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.