சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கூழமந்தல் பேசும்பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோஷணம்

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேசும் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கூழமந்தல் பேசும்பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா சம்ப்ரோஷணம்

Updated On :8 பிப்ரவரி 2026, 9:25 pm

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேசும் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையும்,வரலாற்றுச் சிறப்பும் நிறைந்த பேசும்பெருமாள் கோயில். இக்கோயில் மூலவா் 12 அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் பக்தா்களுடன் பேசுவது போல அருள்பாலிக்கிறாா். இக்கோயில் மகா சம்ப்ரோஷணத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் இம்மாதம் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. 7- ஆம் தேதி வேதபிரபந்த பாராயணம் மற்றும் மூலவா் சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை விஸ்வரூபதரிசனம்,கோபூஜை ஆகியவை நடைபெற்றன. மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப்பிறகு, புனித நீா் குடங்கள் பட்டாச்சாரியாா்களால் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா சம்ப்போஷணம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள், அறநிலையத் துறையினா் மற்றும் கூழமந்தல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா். கூழமந்தல், சுற்றியுள்ள கிராம மக்கள் திரளானோா் பங்கேற்றனா். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.