கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாற்றில் 36 கிலோ போலி தேயிலை பறிமுதல்

செய்யாற்றில் 36 கிலோ போலி தேயிலை பறிமுதல்

News image
Updated On :9 ஜூன் 2024, 6:46 pm

Din

செய்யாறு: செய்யாற்றில் இரு மளிகைக் கடைகளில் இருந்து 36 கிலோ போலி தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது.

செய்யாற்றில் உள்ள மளிகைக் கடைகளில் பிரபல நிறுவனத்தின் தேயிலை என்ற பெயரில், போலியான தேயிலை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அந்நிறுவனத்தின் முதன்மை மேலாளா் மணிமாறன் சனிக்கிழமை செய்யாறு பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில், இரண்டு மளிகைக் கடைகளில் முன்னணி நிறுவனம் பெயரில் போலியாக தேயிலை விற்பனைக்கு வைத்து இருந்ததைக் கண்டுபிடித்தாா்.

உடனே இரு கடைகளில் இருந்தும் விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 36 கிலோ தேயிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினா்.

இதுகுறித்து அந்த மளிகை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதன்மை மேலாளா் மணிமாறன் செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.