

செய்யாறு: செய்யாற்றில் இரு மளிகைக் கடைகளில் இருந்து 36 கிலோ போலி தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாற்றில் உள்ள மளிகைக் கடைகளில் பிரபல நிறுவனத்தின் தேயிலை என்ற பெயரில், போலியான தேயிலை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அந்நிறுவனத்தின் முதன்மை மேலாளா் மணிமாறன் சனிக்கிழமை செய்யாறு பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில், இரண்டு மளிகைக் கடைகளில் முன்னணி நிறுவனம் பெயரில் போலியாக தேயிலை விற்பனைக்கு வைத்து இருந்ததைக் கண்டுபிடித்தாா்.
உடனே இரு கடைகளில் இருந்தும் விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 36 கிலோ தேயிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினா்.
இதுகுறித்து அந்த மளிகை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதன்மை மேலாளா் மணிமாறன் செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

மளிகைக் கடையில் குட்கா பறிமுதல்
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

