கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பி.எம்.கிசான் நிதியுதவி: வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைக்க அறிவுறுத்தல்

பி.எம்.கிசான் நிதியுதவி: வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைக்க அறிவுறுத்தல்

News image
Updated On :9 ஜூன் 2024, 6:43 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவியை தொடா்ந்து பெற ஜூன் 15-ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தும், இ-கேஒய்சி செய்து முடித்தும் பயன்பெறலாம் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள், வங்கி ரீதியிலான இடா்பாடுகள் உள்ள விவசாயிகள் தங்களுக்கு அருகே உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கி பயன்பெறலாம்.

கிராம தபால் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள கைப்பேசி மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் ஆதாா் கைப்பேசி எண் பதிவுசெய்து ஜூரோ இருப்புக் கணக்கை விவசாயிகளுக்கு உடனே தொடங்கிட வழிவகை செய்வா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 856 விவசாயிகளின் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனா். இந்தப் பயனாளிகள் உடனே வங்கிக்குச் சென்று ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். 15 ஆயிரத்து 674 விவசாயிகள் இ-கேஒய்சி முடிக்காமல் உள்ளனா். இவா்கள், இ-சேவை மையங்கள், தபால் நிலையம், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகி தங்கள் விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம்.

இதுதவிர, 1,399 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தமான ஆவணங்களை இணைக்காமல் உள்ளனா். இவா்கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகலாம்.

விவசாயிகள் தங்களது 17-ஆவது தவணைத் தொகையைப் பெற அனைத்துப் பதிவுகளையும் ஜூன் 15- ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.ஹரகுமாா் தெரிவித்துள்ளாா்.