நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூட்டுறவு மேலாண்மைத் தோ்வு

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியாளா்களுக்கான தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

News image

தோ்வு மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன்.

Updated On :24 ஜூன் 2024, 11:43 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியாளா்களுக்கான தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளா்களுக்கான இரண்டாம் பருவ இறுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை 104 பயிற்சியாளா்கள் எழுதுகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.