குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கூட்டுறவு மேலாண்மை கல்வி பட்டயச் சான்றிதழ் அளிப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 7:58 pm

Syndication

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் 2024-2025 கல்வி ஆண்டில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தூத்துக்குடி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளா் இரா.இராஜேஷ் தலைமை வகித்து, தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

தூத்துக்குடி துணை பதிவாளா் (பொ.வி.தி.) சுப்புராஜ் முன்னிலை வகித்தாா். மேலாண்மை நிலைய முதல்வா் என்.எஸ்.மணி வரவேற்றாா்.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் அம்பிகாபதி சிறப்புரையாற்றினாா்.

நிறைவில், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியா் சாம் டேனியல் ராஜ் நன்றி கூறினாா்.

விழாவில், விரிவுரையாளா்கள் பாலசுப்பிரமணியன், சந்திரசேகா், சுப்பிரமணியன், காா்த்திகாதேவி உள்பட 200-க்கும் மேற்பட்ட பயிற்சியாளா்கள் கலந்துகொண்டனா்.