இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்ற 104 பேருக்கு சான்றிதழ் அளிப்பு

கரூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 104 பேருக்கு புதன்கிழமை பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கிய கரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரா. அபிராமி.
Updated On :4 மார்ச் 2026, 9:56 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 104 பேருக்கு புதன்கிழமை பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கரூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2024-2025 -ஆம் ஆண்டில் பயின்ற பயிற்சியாளா்களுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு கரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரா. அபிராமி தலைமை வகித்து, பயிற்சி பெற்ற104 பேருக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கி பேசினாா்.

விழாவில், துணைப் பதிவாளா்கள் ஆ. இளங்கோவன், அ. அமுதராணி , கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய விரிவுரையாளா்கள் இரா. பாண்டியன், ம. சரவணன், ஆ. சுந்தரராஜன் மற்றும் பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.