காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் 55 வயது வியாபாரி உயிரிழப்பு

News image
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

போளூா்: போளூரை அடுத்த வசூரில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா்.

போளூா் அருகேயுள்ள கட்டிபூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் குணாளன் (55). இவா், வசூரில் செங்கம் சாலை அருகே பழக்கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் போளூரில் உள்ள வீட்டுக்கு வந்து குணாளன் உணவு சாப்பிட்டுவிட்டு கடைக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, வசூா் செல்லியம்மன் கோயில் அருகே சென்ற போது, குணாளன் பைக்கை திருப்பியதில் பைக் மீது அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த குணாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து போளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.