சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

12 எஸ்.ஐ.க்கள் உள்பட 60 போலீஸாா் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 போலீஸாா் இடமாற்றம்

Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் 12 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 60 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 12 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 60 பேரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

கள்ளச்சாராய விற்பனை, கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.