திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் 12 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 60 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 12 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 60 பேரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.
கள்ளச்சாராய விற்பனை, கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளா் நெல்லைக்கு மாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

