புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்


புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளா்கள் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதன்படி, 5 ஆய்வாளா்கள், 8 உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்நிலையில் காவல் துறை கண்காணிப்பாளா்கள் 2 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி பிஏபி கமாண்டன்ட், சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பிரிவு எஸ்.பி.யாகவும், சிபிசிஐடி எஸ்.பி. பழனிவேல் காரைக்கால் வடக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் பேரில் தலைமைச் செயலா் சரத் சௌகான் சனிக்கிழமை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...