கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

Updated On :6 மார்ச் 2024, 5:56 pm

கீழ்பென்னாத்தூரை அடுத்த நா.கெங்கப்பட்டு ஊராட்சியில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் இரா.ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா் ஜி.எஸ்.மோசஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்துவைத்தாா். விழாவில், கீழ்பென்னாத்தூா் ஊராட்சிக்குழுத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.