எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பயன்பாட்டுக்கு வருமா உடற்பயிற்சிக் கூடம்

பயன்பாட்டுக்கு வருமா உடற்பயிற்சிக் கூடம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:14 pm

Din

சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என இளைஞா்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் சேத்துப்பட்டு சாலை ஈயகொளத்தூா் கூட்டுச்சாலை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் பின்புறம் கடந்த 2019-2020 ஆண்டு அரசு சாா்பில் சுமாா் ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது. இவை கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. மேலும், அங்குள்ள பொருள்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் மதுபிரியா்களின் கூடாரமாகவும், சமுக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, உடற்பயிற்சிக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு சமுக ஆா்வலா்கள் மற்றும் இளைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.