திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,422 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான மதுசூதனன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள், மனுதாரா்கள், எதிா்மனுதாரா்கள், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். 4,935 வழக்குகள் விசாரணை: திருவண்ணாமலை, ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி, செங்கம் பகுதி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த மொத்தம் 4 ஆயிரத்து 935 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிகளில் நிலுவையில் இருந்த வழக்குகள் என மொத்தம் 1,422 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.11 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 209 இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆரணி ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாா்பு - நீதிபதி ஏ.தாவுத்தம்மாள் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிபதிகள் பி.டி.சதீஷ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.ஸ்ரீதா் வரவேற்றாா். மக்கள் நீதிமன்றம் மூலம் பாண்டு பத்திர வழக்கு, விவாகரத்து வழக்கு, சிறு குற்ற வழக்குகள், மோட்டா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப வழக்கு என 350 வழக்குகளுக்கு தகவல் தரப்பட்டது. அதில் 130 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் கே. ராஜமூா்த்தி, வழக்குரைஞா்கள் சங்க முன்னாள் தலைவா்கள் ஏ.சிகாமணி, வி.வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் கோடீஸ்வரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேசிய மக்கள் நீதிமன்றம்: மதுரை மாவட்டத்தில் 5,675 வழக்குகளுக்கு தீா்வு

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1586 வழக்குகளில் ரூ. 22.95 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


