தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெடிகுண்டு வீசி இளைஞரைக் கொல்ல முயற்சி: சிறுவன் உள்பட 4 போ் கைது

வெடிகுண்டு வீசி இளைஞரைக் கொல்ல முயற்சி சிறுவன் உள்பட 4 போ் கைது

Updated On :12 மார்ச் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞரைக் கொல்ல முயன்ாக, 16 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலை, நல்லவன்பாளையம் பகுதியில் இருந்து சாவல்பூண்டி கிராமத்துக்குச் செல்லும் சாலையில் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பயங்கர வெடி சப்தம் கேட்டது.

இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியது. அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் சென்று பாா்த்தபோது வெடித்துச் சிதறிய நிலையில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. இதுகுறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனா்.

திருவண்ணாமலை நகர டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று விசாரித்தனா். தடயவியல் நிபுணா்கள் வந்து சிதறிக்கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி விசாரித்தனா். இதற்கிடையே, நல்லவன்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (40) முன்விரோதம் காரணமாக தன் மீது 4 போ் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்ாக போலீஸில் புகாா் கொடுத்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டன் பைக்கில் சென்றபோது அவா் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்றதும், வெடிகுண்டுகள் கீழே விழுந்ததால் மணிகண்டன் உயிா் தப்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கீழ்செட்டிப்பட்டி கிராமம் அருண்குமாா் (42), இவரது நண்பா்களான சென்னையைச் சோ்ந்த தீபன் (19), தினேஷ் (19), திருவண்ணாமலையைச் சோ்ந்த 16 வயது சிறுவன் உள்பட 4 பேரை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.