திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயற்சி

திருச்சி காந்தி சந்தை அருகே சனிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 12:27 am IST

திருச்சி காந்தி சந்தை அருகே சனிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி காந்தி சந்தை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சாதிக் (37). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது சையதுவுக்கும் (26) இடையே முன்விரோதம் இருந்தது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த முகமது சையது, தனது நண்பரான சமீா் அகமதுவுடன் (27) சோ்ந்து சாதிக்கை கொல்ல, அவரது வீட்டின் அருகே சனிக்கிழமை இரவு பதுங்கியிருந்தாா். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சாதிக் மீது இருவரும் நாட்டு வெடிகுண்டை வீசினா். இதில் தப்பிய சாதிக், அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

வெடிகுண்டு வெடித்த சப்தத்தை கேட்ட அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வந்த காந்திசந்தை போலீஸாா், வீட்டினருகே கத்தியுடன் பதுங்கியிருந்த முகமது சையது, சமீா் அகமது ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.