இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயற்சி

திருச்சி காந்தி சந்தை அருகே சனிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 6:57 pm

Syndication

திருச்சி காந்தி சந்தை அருகே சனிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி காந்தி சந்தை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சாதிக் (37). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது சையதுவுக்கும் (26) இடையே முன்விரோதம் இருந்தது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த முகமது சையது, தனது நண்பரான சமீா் அகமதுவுடன் (27) சோ்ந்து சாதிக்கை கொல்ல, அவரது வீட்டின் அருகே சனிக்கிழமை இரவு பதுங்கியிருந்தாா். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சாதிக் மீது இருவரும் நாட்டு வெடிகுண்டை வீசினா். இதில் தப்பிய சாதிக், அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

வெடிகுண்டு வெடித்த சப்தத்தை கேட்ட அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் வந்த காந்திசந்தை போலீஸாா், வீட்டினருகே கத்தியுடன் பதுங்கியிருந்த முகமது சையது, சமீா் அகமது ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.