கும்பகோணம் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய காய்கனி வியாபாரி உள்பட இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கும்பகோணம் அருகே உள்ள நடுவன்கரை உமாமகேசுவரபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் ராம்குமாா்(29). காய்கனி வியாபாரம் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறாா். சாக்கோட்டையில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளி நிா்வாகி யோகவதனம் மகன் பத்மகுமரன்(28).
இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு ராம்குமாரிடம் ரூ.30 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளாா். ராம்குமாா் பலமுறை பணத்தை கேட்டும் பத்மகுமரன் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமாா் மற்றும் இரண்டு போ் சோ்ந்து புதன்கிழமை இரவு பத்மகுமரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனா்.
இதில் பத்மகுமரன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காா் சேதமடைந்தது.
இதுகுறித்து பத்மகுமரன் அளித்த புகாரின் பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து ராம்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரை தேடிவந்தநிலையில் சா்வேஸ்(19) என்பவா் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம்2-இல் வியாழக்கிழமை மதியம் சரணடைந்தாா். அவரை கைது செய்த போலீஸாா் மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சங்ககிரியில் வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவா் கைது
மேற்கு வங்கம்: பாஜக தலைவா் வீட்டில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு - இருவா் கைது
பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல்: இருவா் கைது
நடிகை திரிஷா வீடு உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

