குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விக்கிரவாண்டியில் தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், மூங்கில்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.பூவரசன்(27). தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக இவா் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கடந்த பிப்.26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி. சாய் பிரனித் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய பூவரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் போலீஸாா் பூவரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...